த. கோவேந்தன் 109
உனக்குரிய உள்ளத்திலே அவர் குடியிருக்கின்றார்;
உன்னிடமிருந்து அவர் மற்ைந்திருக்கவில்லை, ஆனால் உன்னாலேயே மறைக்கப்பட்டிருக்கிறார்.
உன் மனத்தின் குரலே அந்த ஆசான். வெளிச்சத்தின் உட்புறத்திலும், அமைதியின் அடித்தளத்திலும் அவர் உள்ளார். உற்றுப் பாருங்கன் ஆசானின் குடியிருக்கும் இடத் தைக் காண்பிக்கிறேன்.
அது தூய்மையாக்கப்பட்ட உள்ளம். தன்னலப் பிணைப்புகளைத் , தகர்த்தவர்கள், ஆசைகளை வெட்டி வீழ்த்தியவர்கள், அலைவற்ற வெற்றிகொள்ளப்பட்ட அமைதியான மனம் படைத்தவர்கள்,
உளைவற்றதும் மென்மையானதும் அமைதி மனத்தை உடையவர்,
ஆசானின் முன்னே நுழைந்தவர்கள் ஆகிறார்கள்;
அவர்களுக்கே ஆசானின் நற்புகழும் வெளிப்படு கிறது!
ஒ; கதறி அழுதும் எவ்வகை விடையும்பெறாதவர்களே!
ஒ. அலைந்து திரிந்தும் ஆறுதல் அடையாதவர்களே!
ஒ, தேடியும் வெளிச்சத்தைக் காணாதவர்களே!
உங்களது, சோர்வுற்ற உள்ளத்துடன் வாருங்கள்;
உங்களது குருட்டு மனப்பான்மையுடன் இங்கு வாருங்
கள்,
வந்து, புனிதமான அறிவுரைகளைக் கேளுங்கள்,
அவற்றைக் கேட்டபின், நிறைவும் ஆறுதலும் அடை புங்கள்,