இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
வைணவமும் தமிழும்
இவர் திருமாலின் பரத்துவத்தைப் பலரும் அறிந்து மகிழுமாறு வாதம் செய்து நிலைநாட்டியதற்காக பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுப் பட்டர்பிரான் என்ற விருதையும் பெற்றார்.
- பாண்டியன் கொண்டாடப்
- பட்டர்பிரான் வந்தான் என்று
- ஈண்டிய சங்கம்
- எடுத்தூத- வேண்டிய
- வேதங்கள் ஒதி
- விரைந்து கிழியறுத்தான்
- பாதங்கள் யாமுடைய
- பற்று.[1]
- பாண்டியன் கொண்டாடப்
என்ற வெண்பாவால் அறியலாம். இங்ஙனம் தான் பெற்ற பொருளைத் தம்மூர்த் திருமால் கைங்கரியத்தில் செலவிட்டு அப்பெருமானை - ஆலிலைப் பள்ளியானை - வழிபட்டு வாழ்ந்தார் என்பது குருபரம்பரைகளால் அறியப்பெறும் செய்தி. இதனை இவர்தம் திருவாக்குகளும் உறுதி செய்கின்றன.[2] இங்ஙனம் இவரது வரலாற்றோடு இவரது திரு வாக்குகள் பெரிதும் ஒத்துள்ளன.
இந்த ஆழ்வார் காலத்துப் பாண்டிய மன்னன் பூனிவல்லபன் என்பான்[3]
இப்பெரியார் காலத்தே இராச