பக்கம்:வைணமும் தமிழும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வைணவமும் தமிழும்


‘இருக்குவேதம், சாத்திரம், பிரபந்தம், ஸ்ரீபாஷ்யம்’ ஆகிய வற்றைச் சாதித்தவர் இவர்.தம் திருத்தந்தையார். சகல இரகசியப் பொருள்களைச் சாதித்தவர் ஆட்கொண்டவல்லி சீயர். இவர் யூனிபெரும்புதூரில் எம்பெருமானாரைத் திருமேனியாக எழுந்தருளப் பண்ணினார். சீடர் : கந்தாடை தோழப்பர்.

(16). கந்தாடை இலட்சுமானாசாரியர்: இவர் ஆசாரிய புருஷரில் ஒருவர். இவர் தேசிகர் காலட்சேபம் செய்கையில் அவ்வழிச் சென்றனர். இவரது சீடர்கள் தமது ஆசாரியருக்குத் தேசிகர் மரியாதை செய்யவில்லை என்று அவரது காலைப் பிடித்து இழுத்து அவமதித்தனர். இதனைத் தேசிகர் பொறுத்திருந்தனர். மாணாக்கர் செய்தது ஆசாரியரைப் பற்றுமாகையால் சில நாட்களில் இலட்சுமணாசாரியர் நோய் ாய்ப்பட்டனர். இதன் காரணம் அறிந்து தேசிகரைச் சரண்ம் புடைந்து அவரது திருவடித் தீர்த்தத்தைப் பெற்றுக் கொண்டு நாய் நீங்கப் பெற்றார். மேலும் தீர்த்தத்தின்கனத்தால் ஒரு குமாரரையும் பெற்று அவருக்குத் “தீர்த்தப் பிள்ளை” என்ற திருநாமமும் இட்டு மகிழ்ந்தவர். -

(17). பிள்ளைத் திருநறையூர் அரையர் : இவர் கீழை நாட்டில் கோயிலுக்கு முக்காத வழிதொலைவில் உள்ள தொட்டியம் திருநாராயணபுரத்திலே பெருமாளைச் சேவிக்க - குடும்பத்தோடு எழுந்தருளின சமயத்தில் சில பகவத் விரோதிகள் சந்நிதியில் நெருப்பை வைத்தனர். இதனைக் கண்ணுற்ற அரையர் அவ்வெம்பெருமானுடைய திருமேனிக்கு உண்டான ஆபத்தைக் கண்டு தாமும் பிள்ளைகளுடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் கட்டிக் கொண்டு திருமேனியை விட்ட உபேய அதிகாரி. 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். உரைகளில் இவரைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.