வீடுபேற்றிற்குரிய வழிகள்
259
சரணமடைந்து உய்ந்துபோகலாம் என்று குறிப்பிடுவதையும் உணரலாம். இதே ஆழ்வார் பிறிதோர் இடத்தில்,
அடைக்கலம் புகுந்த என்னை
‘அஞ்சல் என்ன வேண்டுமே (திருச்சந்த-92)
என்று அருளிச்செய்துள்ளதையும் உணரலாம்.இதிலும் எம்பெருமான் சித்தோபாயமாகவே கருதப்பெறுகின்றான் என்பதையும் தெளியலாம்.
திருமங்கையாழ்வாரும்,
“நள்ளேன் உன்னை யல்லால் -
நறையூர் நின்ற நம்பியோ” (பெரி. திரு72:1)
என்ற பாசுரஅடியில் சித்தோபாயத்தில் தன் ஊற்றத்தை வெளியிடுகின்றார், இன்னொரு பாசுரத்திலும் இவர்,
வேங்கடத்து அரியைப் பரிகீறியை
வெண்ணெய்உண்டு உரலிடை ஆப்புண்ட
தீங்கரும்பினை, தேனை, நன்பாலினை,
அன்றி.என்மனம் சிந்தைசெய்யாதே (பெரி திரு. 73:5)
என்று எம்பெருமானையே சித்தோபாயமாகக் கொண்டிருப் பதைக் காணலாம்.
நம்மாழ்வாரும் ஒரு பாசுரத்தில் இந்த உபாயத்தை,
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனை, பொன்சக் கரத்து
அரியினை அச்சுத னைப்பற்றி யான் இறை
யேனும் இடரிலனே (திருவாய்,310:4)
[புள்-கருடன் இறை- சிறிது இடர்-துன்பம்]