வீடுபேற்றிற்குரிய வழிகள்
265
[ஐந்தும் ஐம்புலன்கள், ஆர்வம்- பக்தி; செவ்வே-
நன்றாக கார்ஒத வண்ணனை கருங்கடல் நிறத்தினனை]
என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் பக்திநெறியைக் காணலாம். விஷ்ணுவை என்றும் தன் சித்தத்தில் வைத்திருக்கும் ‘விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின்,
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.
-பெரியாழ் திரு45.3
[மார்வம் இதயம்; ஆர்வம்- பக்தி; அரவதண்டம் -
யமதூதர்களால் வரும் துன்பம்]
என்ற பாசுரப்பகுதியில் இந்நெறியினைக் காணலாம்.
பூகம் சாந்து என்நெஞ்சமே,
புனையும் கண்ணி எனதுடைய
வாச கம்செய்ய மாலையே;
வான்பட்டாடையும் அஃதே;
தேசம் ஆன அணிகலனும்
என்கை கூப்பும் செய்கையே7 (திருவாய் 432)
[சாந்து-சந்தனம்; கண்ணி - மாலை]
என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அவருடைய பக்தி நிலையைக் கண்டு அநுபவிக்கலாம்.
மெய்விளக்க அறிஞர்கள் இப்பக்திநெறி கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று மூன்று நிலைகளில் பயிற்சி அடையவேண்டிய நெறி என்றும் கூறுவர்.