56
வைணவமும் தமிழும்
பாசுரங்களாகக் கொண்டனரோ? என நினைக்க இடம் உண்டு. எப்படியிருப்பினும் இதுவே சரியான முறை. இங்ஙனம் பெற்ற 118 பாசுரங்களும் இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரங்கள் 108-வும் சேர்ந்து 226 என்ற தொகையாக்கி திவ்வியப் பிரபந்தம் 4000 பாசுரங்கள் என்ற கணக்கு நிறைவு பெறுகின்றது.
அப்பிள்ளையாசிரியர்மடலில் அமைந்த ஒரு கண்ணியை (இரண்டு அடிகள்)ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய திருமடலை 771/2 பாசுரங்கள் என்றும், பெரிய திருமடலை 1481/2 பாசுரங்கள் என்றும் கணக்கிட்டு இருமடல்களிலும் 226 பாசுரங்கள் உள்ளனவாகக் கொள்வர். இதனைத் தாம் இயற்றிய திருமங்கையாழ்வார் வாழித் திருநாமத்தில்,
- இலங்கு எழு கூற்றிருக்கை
- இருமடல் ஈந்தான் வாழியே
- இம்மூன்றில் இருநூற்று இருபது
- ஏழ்ஈந்தான் வாழியே[1]
- இலங்கு எழு கூற்றிருக்கை
என வரும் பகுதியால் அறியலாம். இவர் கொள்கைப்படி 'இராமாதுச நூற்றந்தாதி' இன்றியே 4000 என்ற தொகை நிறைவு பெறுகின்றது.
இருவர் கொள்கை எப்படியிருப்பினும் இரு கொள்கைக்கு உரியவர்களும் இராமாதுச நூற்றந்தாதியை மறக்காமல் ஒதி வருவது பாராட்டத்தக்கது. அங்ஙனம் ஒதாமல் விட்டால் “செய்ந்நன்றி கொன்ற” பாவத்திற்கு ஆளாவர். வைணவம் நிலைத்திருக்கும் காலம் வரையிலும் இராமாநுசருடைய திருநாமமும் நிலைத்திருக்குமாறு காத்தல் வேண்டும்.
- ↑ வாழித்திருநாமம்-11