பக்கம்:வைணமும் தமிழும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

61


யாழ்வாருக்குப் 'பரகாலர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் 'பரகால நாயகி' என்ற பெண்மைப் பெயர் வந்து சேரும்.

1. மூன்று வகைப் பாசுரங்கள் :

இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது, அவர்கள் தோழி தாய் மகள் என்ற மூவரில் ஒருவரின் நிலையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். இதனை,

"சம்பந்த உபாய பலன்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்
ஞாவஸ்தைகளுக்குத் தோழி,
தாயார் மகள் என்று பேர்"(133)

[பிரஜ்ஞாவஸ்தைகள் - மூன்று காலங்களையும் அறியும் அறிவின் நிலை]

என்று ஆசாரிய ஹிருதம் பேசும்.இங்ஙனம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் பாசுரங்கட்குத் தத்துவமும் கூறுகின்றது.

இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது அவர்கள் பாசுரங்களும் தோழி சொல்வதுபோல் உருக்கொண்டு 'தோழிபாசுரம்' என்று பெயர் பெறும்; தாய் சொல்லுவது போல் வடிவெடுத்துத் 'தாய்ப் பாசுரம்' என்று திருநாமம் பெறும்; தலைவி சொல்வதுபோல் வடிவெடுத்து 'மகள் பாசுரம்' என்று வழங்கப்பெறும். இங்ஙனம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பாசுரங்கள் வெளிவந்தாலும் பாசுரங்கள் பேசுகின்றவர்கள் ஆழ்வார்களேயாவர். இதனைப் பதிகங்கள்