பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்
61
யாழ்வாருக்குப் 'பரகாலர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் 'பரகால நாயகி' என்ற பெண்மைப் பெயர் வந்து சேரும்.
1. மூன்று வகைப் பாசுரங்கள் :
இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது, அவர்கள் தோழி தாய் மகள் என்ற மூவரில் ஒருவரின் நிலையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். இதனை,
- "சம்பந்த உபாய பலன்களில்
- உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்
- ஞாவஸ்தைகளுக்குத் தோழி,
- தாயார் மகள் என்று பேர்"(133)
[பிரஜ்ஞாவஸ்தைகள் - மூன்று காலங்களையும் அறியும் அறிவின் நிலை]
என்று ஆசாரிய ஹிருதம் பேசும்.இங்ஙனம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் பாசுரங்கட்குத் தத்துவமும் கூறுகின்றது.
இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது அவர்கள் பாசுரங்களும் தோழி சொல்வதுபோல் உருக்கொண்டு 'தோழிபாசுரம்' என்று பெயர் பெறும்; தாய் சொல்லுவது போல் வடிவெடுத்துத் 'தாய்ப் பாசுரம்' என்று திருநாமம் பெறும்; தலைவி சொல்வதுபோல் வடிவெடுத்து 'மகள் பாசுரம்' என்று வழங்கப்பெறும். இங்ஙனம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பாசுரங்கள் வெளிவந்தாலும் பாசுரங்கள் பேசுகின்றவர்கள் ஆழ்வார்களேயாவர். இதனைப் பதிகங்கள்