இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சால நன்று
59
வேடனையும், நெய்தல் வேலையை உடைய கைக்கோளனை யும்,மலைவாசியாகிய வேலனையும் இந்தப் பாட்டில் நினைப் பூட்டுகிறார்.
இறைவனை வாயார வாழ்த்துவது எல்லோருக்கும் எளிய காரியம். அதைச் செய்துகொண்டு வாழ்வது எல்லோருக்கும் நல்ல செயல் என்பது இந்தப் பாட்டின் கருத்து .
★
<poem> கருமான் மருகனைச் செம்மான்,
- மகளைக் களவுகொண்டு
வரும்ஆ குலவனைச் சேவல்கைக்
- கோளனை வானம்உய்யப்
பொருமா வினைச்செற்ற போர்வே
- லனைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை
- வாழ்த்துகை சாலநன்றே.
கரிய நிறம் பெற்ற திருமாலின் மருமகனை, செந்நிறம் பெற்ற மான் உருவில் வந்த திருமகளுடைய மகளாகிய வள்ளிநாயகியைப் பிறர் அறியாமல் எடுத்து வரும் கவலையை உடையவனை, சேவலாகிய கொடியைக் கையிலே கொண்டவனை, தேவலோகத்திலுள்ள அமரர்கள் உயிர் பிழைக்கும் வண்ணம் அவர்களோடு பொருத சூரபது மனாகிய மாமரத்தை அழித்த போரில் சிறந்த வேலாயுத முடைய கடவுளை, குலை ஈனாத கமுகமரங்களுடன் பழங்களைத் தருகின்ற மாமரங்கள் பொருந்திய திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள முருகனை வாழ்த்துதல் வாழ்த்துபவருக்கு மிகவும் நன்றாகும்.
திருமகள் மானாக வள்ளிமலையில் உலவ, திருமால் சிவ முனிவராக இருந்து தவஞ் செய்தவர் அந்த மானைக் கண்டு காமுற்று நோக்க, அதனால் அம் மான் கருவுற்று வள்ளி நாயகியை ஈன்றது. அதனால், 'செம்மான் மகள்' என்றார்.