இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாந்தன் விருப்பம்
மாந்தற்குள்ள பெருமையெல்லாம் புதுமை படைக்கும் மனத்தாலாம்! மாந்தன் கைகளின் இவ்வாற்றல் மண்ணை உயர்த்தும் பேராற்றல்!
வெண்ணிலாவும் விண்மீனும் விளைந்த நல்லுயிர் ஒவ்வொன்றும் விண்ணில் மண்ணில் என்றென்றும் விளைந்த நாள் போல் சுழல்கிறதே.
--------
இறைவன் ஆணை இடுகின்றான்: "இதுஇப் படியே இருக்கட்டும், முறைவே றெதையும் சொல்லாதே முனைந்தே எதையும் செய்யாதே."
மனிதன் சொன்னான்: "ஆமாம் அது மண்ணில் இப்படித்தானானால் இனிஇப் படித்தான் இருந்திடுதல் வேண்டும் எண்ணம் எனக்குரித்தே.
33