அவளுடைய விழிகள் வடித்த நீர்த்துளிகள் அவள் மேனியை நனைத்தது. கோலக் கரங்களைக் குவித்து ‘நமஸ்தே’ தெரிவித்தாள். மறுநிமிஷம் வண்டி மறைந்தது. ஆனால் அவள் பிரதிபிம்பம் மறையவில்லை என் அகக் கண்களை விட்டு.
அன்று பூராவும் தூக்கம் பிடிக்கவில்லை. சுஜாதாவின் நினைவில் மனம் இணைந்து சுழன்றது.
அடுத்த நாள் லதாவைக் காண ஸ்டேஷன் சென்றேன். வழியில் லதாவின் இன்ப நினைவு; நீல வழிகளைச் சுழல விட்டு செவ்வதாங்களை லேசாக மடித்து குறுநகை பூக்கும் அவளது மோகன ரூபம் தோன்றி மறைந்தது.
ரயில் வந்தவுடன் என் கண்கள் லதாவைத் தேடின, ‘அத்தான்’ என்ற குரல் கேட்டது. நான் தேடி கின்ற அதே வண்டியில்தான் லதா இருந்தாள். விழித்துப் பார்த்தேன். “யார், லதாவா?” என்று அலறிவிட்டேன். மலர்ந்த ரோஜா போன்றிருந்த அவள் வாடிப் போய்ப் பார்க்கப் பரிதாபமாகக் காட்சியளித்தாள்.
“அத்தை, மாமா எங்கே” என்று கேட்டேன். ‘ஓ’ வென்று ஓலமிட்டாள். அவர்கள் குண்டு பட்டு இறந்துவிட்டார்களாம். துன்பத்துக்கு மேல் துன்பம்! அனாதையான எனக்கு அவர்களாவது உதவி செய்வார்கள் என்றிருந்தேன். அதுவும் பகற்கனவாகிவிட்டது.
இங்கேயே இருந்து உடம்பைப் பார்த்துச் செல்லும்படி கெஞ்சினேன். அவள் கேட்கவில்லை. நான் அவளை வரவேற்க இருக்க, அவள் என்னை உபசரித்தாள். பழம் நிறைந்த பை ஒன்றை என்னிடம் கொடுத்தாள். ஆனால் அவள் அன்புச் சுமையின் அந்தரங்கம்---!
ரயில் புறப்பட்டது.
★
அதற்குள் எப்படி அவ்வளவு நாட்கள் கழித்தனவோ? அன்றைக்குப் புத்தகமொன்றைப் புரட்டிக்கொண்டிருந்-
61