இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏலச்செடியில் ரகம் மூன்று 2
தென் இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், என்றென்றும் பசுமை கொழிக்கும் காடுகள் தழைத்துச் செழித்துப் படர்ந்து பரவிக்கிடக்கின்ற மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகளில் பரவலாகவும் தீவிரமாகவும் பயிர்செய்யப்பட்டு வருகின்ற சிறிய ரக ஏலக்காய்ச் செடிகளிலே, மூன்று பிரிவுகள் உண்டு.
- அவை:
- 'மைசூர் வகை'
- 'மேலபார் ரகம்'
- 'வழுக்கா இனம்'.
- அவை:
ஏலச்செடிகளின் வடிவ அமைப்பின் இயல்புகளை உணர்ந்தும் அவற்றின் குணநலன்களைக் கண்டும் இந்த மூன்று வகைச் செடிகளையும் இனம் கண்டு கொள்ளவும் முடியும்!
ஏல விவசாயத்தில் கேரளம்தான் முதன்மையான நிலையைப்பெற்று விளங்குகிறது.
மைசூர் ரகம்
ஏலக்காய்ச் செடியின் மைசூர் ரகம் உறுதி மிகுந்தது: 2-3 மீட்டர் உயரம் வளரும். நீண்ட காம்புகளுடன் கூடிய இலைகள் இருண்ட, அழுத்தமான பச்சை நிறத்தில்