பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

பல்லவர் வரலாறு



அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே
பொற்றேரான்கச்சிப் பொலிவு.”

பெரியபுராணம் இது கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்ற நூல்; சோழர் அலுவலாளரும் தொண்டைநாட்டினரும் காஞ்சியை நேரிற் பார்வையிட்டவருமாகிய சேக்கிழார் காஞ்சி நகரத்தைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் 60 பாக்களில் சிறப்பித்துள்ளார்.[1] அப்பாக்களில் வரும் செய்திகளிற் பெரும்பாலான நகர்நிலைமையை அறியப் பேருதவி செய்வனவாகும்.

கெட்டிஸ் துரை கூற்று

இந்நகர அமைப்பைப்பற்றி, நகர அமைப்புத் திட்டவல்லுநரான திரு. கெட்டிஸ்துரை அவர்கள் கருத்து கச்சி நகராண்மைக் கழக அறிக்கையில் (1914-1915) அழகாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதில் சில பகுதிகள் ஈண்டுக் காண்க:-

“காஞ்சி நகரம் எண்ணிறந்த கோவில்கட்கு மட்டுமே பெயர் பெற்றதன்று. மிக்க தேர்ச்சியுடனும் கூர்ந்த அறிவுடனும் அமைக்கப்பட்ட நகர அமைப்புக்கும் இந்நகரம் பெயர்பெற்றதாகும். இந்த நகர அமைப்புத் திட்டத்துக்கு இணையான ஒன்று இந்தியாவில் உள்ள வேறு எந்த நகரத்திலும் இல்லை; உலகத்தில் உள்ள வேறு எந்த நகரத்திலும் இல்லை. வீடுகள் பாதை மட்டத்திற்குப் பல அடிகள் உயர்த்திக் கட்டப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது. மேனாட்டு உயர்ந்த பெரிய நகரங்களில் காணக் கிடைக்கும் இருட்டுச் சந்துகளும் பலவகை அழுக்குகளும் காஞ்சியிற் காண்டல் அருமை!..... ஏகாம்பரநாதர் கோவிலைச் சேர்ந்த தேர் ஓடும் வீதிகளும், காமாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்த தேர் ஒடும் வீதிகளும் ஒன்றுக்கொன்று இடர்ப்படாமல் அமைத்துள்ள முறை வியந்து பாராட்டத்தக்கதாகும்.நகர அமைப்புத்திட்டப் பயிற்சி பெறுவோர்க்கு இது சிறந்த இலக்காக அமைந்திருக்கிறது......”[2]


  1. S.50-110.
  2. Prof. Geddes’s ‘Report of Towns’ G.O.N.1272, M.dated 16-8-1915.