இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
191
முற்றும் உணராத
மூடர்களுக் குப்பகைவன்
தனக்குவமை இல்லாதான்
தாளில்ப் பணியாது
மனத்துக்கண் மாசுடைய
மாக்களுக்கெல் லாம்பகைவன்
அரன்அதிகன் உலகளந்த
அரிஅதிகன் என்றுரைத்து
பரகதிக்குச் சொல்லமொரு
பரிசில்லார்க் குப்பகைவன்
சத்தியத்தொடு அஹிம்சை
சமயத்தில் சமரசமே
நித்தியமும் வாழ்வினிலே
நிறுத்தாதார்க் குப்பகைவன்
அஞ்சாது திருடாது
அருள்நெறியில் தான்நின்று
எஞ்சாது பணிபுரியும்
ஏற்றமிலார்க் குப்பகைவன்
வாய்மையொடு மரபை
வையத்தில் காப்பதற்கு
துயஉயிரை விடத்
துணிவில்லார்க் குப்பகைவன்
கள்ளத்தால் பிறர்மனையைக்
கொள்ளத்தான் குறிக்கொண்டு
உள்ளத்தால் உன்னுகின்ற
உலுத்தர்களுக் குப்பகைவன்
வாழ்வாங்கு வையகத்தில்
வாழத் தெரியாமல்
பாழும் நெறிகளிலே