11. கந்தபுராணம் 829 (11) ஆதலின் நமது சத்தி அறுமுகன், அவனும் யாமும் பேதகம் அன்றால், நம்பொற் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்(43) (1-14-18, 19) (தேவர்கள் துதிப்பது) (12) கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை உமைதன் மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலைபுனையும் தந்தை நம ஆறுமுக ஆதிநம சோதிநம தற்பரமதாம் எந்தை நம: என்றும்இளை யோய் நம: குமாரநம: (என்று தொழுதார்). (44) (1-14-82) (துதி) (13) ஊரி லான்குணங், குறியிலான், செயலிலான், உரைக்கும் பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான். (45) * (2-1-1) (துதி) (14) விரிஞ்சன்மால் தேவராலும் வெலற்கரும் விறலோனாகிப் பெருஞ்சுரர் பதமும்வேத ஒழுக்கமும் பிறவும் மாற்றி அருஞ்சிறைஅவர்க்குச்செய்த அவுணர்கோன் ஆவிகொள்வான் பரஞ்சுடர் உருவாய்வந்தகுமரனைப்பணிதல்செய்வாம். (3-1-1) (46) (இந்திரன் மகன் சயந்தன் கனவில் முருகவேள் அடைதல்) (15) வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம் மாறி லாத வேல் அபயமே வலம் இடம் வரதம் ஏறு பங்கயம் மணிமழுத் தண்டுவில் இசைந்த ஆறி ரண்டுகை அறுமுகங் கொண்டுவேள் அடைந்தான். (3-10-4) (47) வீரவாகுதேவர் குரனக்கு உரைப்பது (16) ஈசனே அவன் ஆடலால் மதலையா யினன்காண் ஆசிலா அவன் அறுமுகத் துண்மையால் அறிநீ பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன் தேசுலா அகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல். (48)