பக்கம்:அவள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 லா. ச. ராமாமிருதம்

என்னை வரவேற்கிறேன். நாளைய தான் இன் மறு பெயர் நம்பிக்கை. என்றும் எனக்கு அழிவு இல்லை. தேடினாலும் இல்லை.

சொற்கள், செய்கைகள், வாழ்க்கை, பிறவி, மரணம், உலகு, சிருஷ்டி, அழிவு-எல்லாம் நான் இன் உச்சரிப்பு 'நான்'க்கு அர்ச்சனை. நானுக்கு நான் அர்ப்பணம்.

ஒரு ஸ்ரீலங்கன் என்னை பார்க்க வந்திருந்தார். பேச்சு, அவர் நாட்டு நிலைமைபற்றித் திரும்பாமல் முடியவில்லை.

"நான் இந்தியாவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. மகனைப் பள்ளியில் சேர்க்க வந்தேன்."

"என்ன படிக்கிறான்."

"'பத்தாவது சேரப் போகிறான்."

"பத்தாவதுக்கா வந்தீர்கள்? ஏதாவது காலேஜுக்கு ப்ரயத்னம் பண்ணுகிறீர்கள் என்று நினைத்தேன்."

"காலேஜா? பள்ளிகள் எல்லாம் எப்பவோ மூடியாச்சு, பையன்களுக்குப் படிப்புக் கிடையாது. எல்லாரும் போருக்குப் போகிறார்கள்."

பேச்சை மாற்றும் முறையில், "உங்கள் நாட்டு இலக்கியம் எப்படி இருக்கிறது?"

"உரைநடையைக் காட்டிலும் கவிதை நன்றாயிருக்கிறது. அங்கே புதுக்கவிதை மிகச் செழிப்படைந்ருக்கிறது.”

"அப்படியா?" (கவிதையில் நான் சூன்யம்)

"இதோ பாருங்கள் ஒரு புதுக்கவிதை. துப்பாக்கியைத் துாக்கிவிட்ட ஒரு குழந்தை வாயில் கவிஞன் தன் வார்த்தைகளை வைக்கிறான். என் விரோதிகளை என் நண்பர்கள் எனக்குக் காட்டுவார்கள். அப்போது நான் சுடுவேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/74&oldid=1496298" இலிருந்து மீள்விக்கப்பட்டது