274
மீட்கும் மலர் கரந்தை கரந்தை வயல்
அதுதான் கரந்தைப் பூ. இப்பூவால் பெயர்பெற்றது கரந்தைப்போர். தமது ஆநிரைகளைப் பறிகொடுத்தோர் அவற்றை மீட்கும் போருக்கு முனைவர். அதன் அடையாளமாகக் கரந்தைப் பூவைப் போர் மரபிறந்த அறிஞர், வீரரது தலையில்சூட்டுவர். இவ்வாறு, -
'விசகறியாளர் மரபிற் சூட்ட" இவ்வீரர் இப்பூவால் கரந்தையார் ஆவர். இப்படையைக்காண்போர் இவர் ஆநிரைகளை மீட்கச் செல்கின்றனர்' என, கரந்தையஞ் கன்னியாற்கண்டு 2 கொள்வர்,
ஆநிரைகளை மீட்கமட்டும்.அன்று, யானை முதலிய பிற கவரப்படின் அவற்றை மீட்கவும் கரந்தைப் பூவைச் சூடிச்செல்வதும் உண்டு. இப் பூவைத் தலையிற் கண்ணியாகச்சூடுவதுமட்டுமன்று; மாலையாகவும் அணிந்து,
- "தொடலைக் கரந்தை மரவ' 8 ராக விளங்குவர்.
வீரர் இப்பூவாற் பெயர் பெறுவது போன்று, இது விளையும் நிலமும் இதனை அடைமொழியாகப் பெற்றது. -
இது வயற்புறங்களில் பயிர்த்தொழில் முடிந்ததும் முளைக் கும். வயலில் நிறைய வளர்வதால் இவ்வயல்,
'கரந்தை அம் செறுவில் பெயர்க்கும்’4
'கரந்தை அம் செறுவில் வெண்குருகு ஒப்பும்' -என்று கரந்தை வயல் எனப்பட்டது. விளையும் நிலத்திற்கும் தனது பெயரை இவ்வாறு ஏற்றும். விளை நிலம் வயலாததால்,
இது மருதநிலப் பூ
1 ບຸp໖ : 261 : 14. - 2 தொல் : புறத் திணையியல். மேற்கோன் பாடல், 3 பெரும்பொருள் விளக்கப் பாடல், # tịpià : 340 : 8
5 அகம் : 25 : 5