இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
716
மகரந்த வட்டம் | : | ஆண் பூவில் மடல்களின் கட்கத்தில் கிளைத்த சோற்று மகரந்தக் கிளைகள் எண்ணற்ற மகரந்தப் பைகளைத் தாங்கி நிற்கும். இவற்றில் சாம்பல் நிறமான நறுமண மகரந்தம் உதிரும். |
சூலக வட்டம் | : | பெண் பூவில் 5-12 சூலறைகளைக் கொண்ட தொகுதியான சூலகம் உண்டாகும். சூல்-ஒரு செல் உடையது. |
கனி | : | பருத்த சதைக்கனி. 2-4 அங். நீளமும், 6-10 அங். அகலமும் உள்ளது. மஞ்சளும், சிவப்புமான நிறமுள்ளது. |
இதன் அடிமரத்திலிருந்து விழுதுகள் உண்டாகும். இதன் இலைகள் பாய், குடை முடையப் பயன்படும். மரத்தின் நார் பலவாறு பயன்படும். மலரின் மடலிலிருந்து, நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது மருந்துக்குப் பயன்படும். இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 51, 54, 60 என ஸ்காட்ஸ் பர்க் (1955) என்பவரும், 2n = 60 என ஆர். எஸ். இராகவனும் (1959) கணித்துள்ளனர்.