பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231. இவற்றின் சுரப்புகளும் அவற்றின் வேலைகளும் யாவை?

1. புறணியின் சுரப்பு கார்ட்டின். இது குருதியில் உப்பின் அளவைச் சரி செய்வது. பெண்ணிடத்து ஆண்மையை உண்டாக்குவது.
2. அகணியின் சுரப்பு அட்ரினலின். இது குருதி அழுத்தத்தை ஒரே சீராக வைக்கிறது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பது.

232. விடலைப்பருவம் (அடோலசன்ஸ்) என்றால் என்ன?

குழந்தைப் பருவத்தின் இறுதியில் தொடங்கி, முழு முதிர்ச்சி ஏற்பட்டவுடன் முடியும் ஒரு முதன்மையான வளர்ச்சிப் பருவம்.

233. இதன் வயது எல்லை என்ன ?

1. ஆண் 13-25
2. பெண் 12-18.

234. இப்பருவத்தை அழகாக விளக்கியுள்ள பெரும் இந்தியத் கவிஞர் யார்?

நோபல் பரிசுப் பெற்ற கவி தாகூர்.

235. நம் உடலிலுள்ள நாளமுள்ள சுரப்பிகள் யாவை?

உமிழ்நீர்ச்சுரப்பிகள், கணையம், கல்லீரல்.

236. கல்லீரலின் சிறப்பென்ன?

உடலிலுள்ள சுரப்பிகளில் மிகப் பெரியது. இது சுரக்கும் பித்த நீர் பித்தநீர்ப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உடலின் வேதித் தொழிற்சாலை.

237. கல்லீரல் தொடர்பாக உண்டாகும் இருநோய்கள் யாவை?

கல்லீரல் இறுகல், மஞ்சட்காமாலை.

238. கல்லீரலின் வேலைகள் யாவை?

1. குருதி வேதி இயைபைச் சீராக்குதல்.
2. கொழுப்பு செரிக்கப் பித்தநீர் உதவுதல்.
3. இரும்பைச் சேமித்தல்.
4. வைட்டமின்கள் A,D ஆகிய இரண்டையும் சேமித்தல்.
5. குருதியிலிருந்து நஞ்சுகளை நீக்குதல்.

239. பித்தநீர் என்றால் என்ன?

கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு. இது