இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தங்கக்குலை தொங்குதுபார்
மாமரத்திலே!
தகதகத்து மின்னுதுபார்
மாமரத்திலே!
கல்லெடுத்தே எறியலாமா
மாம்பழத்திலே?
கள்ளத்தனம் கூடாதுபார்
நமது நாட்டிலே!
கடைக்குவரும் வாங்கித் தின்போம்
வேண்டு மட்டுமே
கற்கண்டாய் இனிக்கும் அந்த
மாம்பழங்களே!