இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பு காட்டு தாயிடம்
அழகு பெருகும் உன்னிடம்
அன்பு காட்டு தந்தைக்கே
அறிவு பெருகும் உன்னிடம்
அன்பு காட்டு பகையிடம்
அமைதி நிலைக்கும் உன்னிடம்
அன்பு காட்டு உயிர்க்கெலாம்
அவனி போற்றும் உன்னையே!
புத்தர் சொன்ன பொன்மொழி
போற்றி அன்பு காட்டுவோம்!