இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
62
குயிலின் பேச்சைக் கேட்டதன்பின்-வான்
கோழி எழுந்து கூறியது: குயிலே தனது குற்றத்தை-ஒப்புக் கொண்டு விட்டது கண்டீர்கள்.
உரிய தண்டம் கொடுத்திடலே-நல்
ஒழுங்காம்; நெறியாம் என்றதுவே! பெரிய ஆந்தை வான்கோழி-சொன்ன
பேச்சுக் காமாம் போட்டதுவே!
மற்றோர் தலைவர் நெறிமன்றில்-உள்ள மரங்கொத் திதான் எழுந்தங்கே
சற்றும் பொருத்தம் இல்லை நீர்-குயிலைச்
சாட்டும் பழியில் நெறியில்லை.
ஏதோ காக்கைக் கூட்டினிலே-முட்டை
இட்ட குற்றம் பெரிதென்றே
சூதாய்க் குற்றம் சுமத்துகின்றீர்! - தண்டம்
கொடுக்க முடிவு செய்கின்றீர்!
கானில் வாழும் நமக்கெல்லாம்-இன்ப
கானம் வழங்கிச் சிறப்பளிக்கும் ஞானக் குயிலைத் தண்டித்தால்-அது
நமக்கே கேடாய் முடிந்துவிடும்.
பிறர்க்குக் கேடு செய்வதாய்-மிகப்
பெரிதாய்க் குற்றம் சுமத்துகிறீர் அறவே பேச மறந்தீர்கள்-நமக்கு
அதுசெய் கின்ற நன்மைகளை!