348 - - பெரிய புராண விளக்கம்-4
செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகள் இரண்டை யும் வேறு யார் நற்குணங்களைப் பெற்ற சிவ பெரு மானுடைய அடியவர்கள் அல்லாமல் அன்பு கொண்டு நேராக நிற்குமாறு செய்ய வல்லவர் ?’ பாடல் வருமாறு :
விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத்
திண்சிலை குனிய கின்றார் செங்கிலை காணச்
. - செய்தீர்;
மண்பகிர்ந் தவனும் காணா மலரடி இரண்டும் யாரே பண்புடை அடியார் அல்லால் பரிந்துநேர் காண
. வல்லார் .'
விண்-ஆகாயத்தில். பயில்-பறந்த புரங்கள்-மூன்று புரங்களாகிய பறக்கும் கோட்டைகளை. வேவ-எரியும் வண்ணம். வைதிகத்தேரில்-வேதமாகிய இரதத்தில், மேரு. மேருமலையாகிய, த்: சந்தி. திண்-உறுதியான. சிலை-வில். குனிய-வளைய. நின்றார்-நின்றவராகிய அருணஜடே சுவரர். செந்நிலை-நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையை, காண-யாவரும் தரிசிக்குமாறு. ச் சந்தி. செய்தீர்-தாங்கள் புரிந்தீர்கள். மண்-மண்ணுலகத்தை. பகிர்ந்தவனும். தோண்டிப் பார்த்த திருமாலும்,கானா-தேடியும் பார்க்க முடியாத மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். அடி-திருவடிகள் ஒருமை பன்மை மயக்கம். இரண்டும்-இரண்டையும். யார்-வேறு எவர். ஏ: அசை நிலை. பண்பு-நல்ல குணங்களை ஒருமை பன்மை மயக்கம். உடைபெற்ற அடியார்-அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அல்லால்-அல்லாமல். பரிந்து-அன்பு கொண்டு. நேர்காண-நேராக நிற்குமாறு செய்ய வல்லார்
āpl © © Ꭷal fᎢ . .
அடுத்து வரும் 81-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
என இவ்வாறு உண்மையான திருத்தொண்டராகிய
குங்குலியக் கலய நாயனாரைத் துதித்துவிட்டு அந்தத் திருப் பனந்தாளில் அடியேங்களுடைய தலைவனாகிய அருண