இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
குழந்தை உலகம்
- அஞ்சு : கல்லாலின் அடியிருக்கும்
- கடவுளுக்கு முடிக்கொழுந்து அஞ்சு.
- ஆறு : தேவரெலாம் நீராடச்
- சேருவது பொன்முகலி ஆறு.
- ஏழு : சிலந்தி முன்னே பூசிக்கச்
- சேவடிபூ சித்தவர்கள் ஏழு.
- அஞ்சு : கல்லாலின் அடியிருக்கும்
இப்படி வருகின்ற ஏதோ ஒரு பாட்டைப் பாடி உற்சாகத்தோடு கழங்காடுகின்றாள். முத்துக் கழங்கும், நீலமணிக்கழங்கும், பவழக்கழங்கும், வயிரக்கழங்கும், பத்மராகக்கழங்கும், பொற்கழங்கும் மரகதக்கழங்குமாக ஏழு கழங்குகளே அவள் ஆடுவதாகப் புலவர் சொல்கிறார். புலவர் வாக்கையே பார்க்கலாம்.
- மூரல் ஒளிவீசும் முத்தின் பருங்கழங்கும்
- காரகை நீலக் கருங்கழங்கும்—ஆரமுதச்
- சேமஇத ழைப்போற் சிவந்தபவ ழக்கழங்கும்
- காமர் உதிர்வயிரக் கற்கழங்கும்—தாமமலர்க்
- கைச்செம் பதுமரா கக்கழங்கும் பொற்கழங்கும்
- பச்சை மயிலியலின் பைங்கழங்கும்—மெச்சஎடுத்
- தொன்றென் றுலகமெலாம் ஒன்றாய் ஒடுங்கிவிடும்
- அன்றுமுள கல்லால் அடிபாடி—நன்றென்று
- இரண்டென் றெழிலடியார் ஈடேற நல்கும்
- பரந்தஇரு பாதங்கள் பாடி—நிரந்தரமும்
- மூன்றென்று மூன்று முதலிகளும் தாம்புகழும்
- சான்ற சுருதித் தமிழ்பாடி—ஆன்றவொரு
- நாலென்று மாசிமகம் நாடோறும் தெண்டனிடு
- மூல மறையின் முடிபாடிச்—சாலவே
- அஞ்சென்று கல்லால் அடியிற் கரும்பினுயர்
- அஞ்சு கொழுந்தின் அடிபாடி—நெஞ்சுருகி
- ஆறென்று நாளும் அமரர்புகுந் தாருடி
- நீறணியும் பொன்முகரி நீர்பாடி—வீறுடனே