பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 2-3 49,787 1,807 3-4 1,34,105 9,273 4-5 3,02,425 I7,703 5-10 22, 19,778 94,240 10-15 1,00,87,024 2,23,320 இந்தக் கணக்கின்படி, இந்தியாவில் பிறந்து ஒரு வருஷ மாகு முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின் தொகை 1,014 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3; லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000 பேர் ஐந்துவயதுக் குட்பட்டோர்! இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு, அவற்றின் இறுதியில், மேற்படி கடிதம் எழுதியவர். இக் கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடைய மனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்ற பாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?' என்று சொல்லி வருத்தப்படுகிரு.ர். இந்த வியாசத்தின்மீது மகாத்மா காந்தி பத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிரு.ர். அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில், ரீமான் காந்தி மேலே காட்டிய தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்" என்கிருர். அப்பால், இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும் உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிருர். அவற்றின் சுருக்கம் யாதெனில் (1) பால்ய விவாகத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதும் (2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமை யுடைய கைம்பெண்களும் புனர் விவாகம் செய்துகொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமே யாகும்,