இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46 சுரதா கவிதைகள்
நாட்டியம்
நாட்டியம். பேசாப் பேச்சாம்! நமதுதாய்த் தமிழின் மூச்சாம்: நாட்டியக் கலையே. கண்ணை நாக்காக மாற்றும் வித்தை!
- இதழ்: சுரதா (1-12-1969)
3ᏕᏍöyü
இலையார்வம் ஆடு கட்கும்
எழுத்தார்வம் கவிஞர் கட்கும் விலையார்வம் வணிகர் கட்கும்
வினையார்வம் சிலர்க்கும், செந்தி உலையார்வம் கொல்லர் கட்கும்
உண்டாதல் இயற்கை வாழ்வில் கலையார்வம் எல்லோ ருக்கும்
கணிவது கடின மாகும்.
- இதழ் சுரதா (15-8-1969)
அலைவரம்பு மீறிவிடின் நெய்தல்நிலப் பகுதியெலாம் அழிந்து போகும் கலைவரம்பு மீறிவிடின் சமுதாயச்
சிந்தனைகள் கருகிப் போகும்.
-இதழ் சுரதா (1.3-68)