இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126
காற்றில் வந்த கவிதை
கிறாள். அதைக் கூறும் நாடோடிப் பாடலிலே தாயின் அன்புள்ளம் இனிமையான இசையிலே வெளியாவதைக் காணலாம்.
மலையோரம்-மகனே
போகாதேடா
மலை நாகம்-மகனே
தீண்டிடுமே
செடியோரம்-மகனே
போகாதேடா
செடி நாகம்-மகனே
தீண்டிடுமே
கல்லோரம்-மகனே
போகாதேடா
கல் நாகம்-மகனே
தீண்டிடுமே
புத்தோரம்-மகனே
போகாதேடா
புத்து நாகம்-மகனே
தீண்டிடுமே