பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

காற்றில் வந்த கவிதை

கிறாள். அதைக் கூறும் நாடோடிப் பாடலிலே தாயின் அன்புள்ளம் இனிமையான இசையிலே வெளியாவதைக் காணலாம்.

மலையோரம்-மகனே
      போகாதேடா
மலை நாகம்-மகனே
      தீண்டிடுமே
செடியோரம்-மகனே
      போகாதேடா
செடி நாகம்-மகனே
      தீண்டிடுமே
கல்லோரம்-மகனே
      போகாதேடா
கல் நாகம்-மகனே
      தீண்டிடுமே
புத்தோரம்-மகனே
      போகாதேடா
புத்து நாகம்-மகனே
      தீண்டிடுமே