52
பாரதி தழிழ்
எழுதியுள்ளார். கீழ்க்கண்ட அக்கடிதம் சுதேசமித்திரனில் 19-12-1918 தேதியில் வெளிவந்துள்ளது
கடயம், டிசம்பர் 17
ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞரயிற்றுக்கிழமை (15-ஆம் தேதி) இரவு நான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.
ஸ்ரீமதி அனிபெஸண்ட், ஸ்ரீ மணி அய்யர், ஸ்ரீ சி.பி ராமசாமி அய்யர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தையெடுத்துக் கொண்ட தங்களுடைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
தங்களன்புள்ள, சி. சுப்பிரமணிய பாரதி
கடயத்திலிருந்து அவர் பர்லி. சு. நெல்லையப்பருக்கு 1918 டிசம்பர் 21-ஆம் தேதியிட்டு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், சுமார் 20 நாட்களுக்கு மேல் பாரதியார் சிறையில் இருந்திருக்கிறார்.
கடயத்திற்கு வரும்போதே பாரதியாரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்துவிட்டது. உள்ளத்திலே உணர்ச்சி வேகம் மாறதிருப்பினும் உடல் ஒடிந்து போய்விட்டது. அவர் ஒரு புது மனிதராகக்காணப் பட்டார்.
புதுச்சேரியிலிருந்து திரும்பிய பாரதியாரைப்பற்றி திரு.எஸ்.இராமாநுஜலு நாயுடு 1921 செப்டம்பர் 17-ஆம் தேதி சுதேசமித்திரன் வார