இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104 கவிஞர் முருகு சுந்தரம் கம் மந்திர முனிவரின் மையல் மனைவி அழகில் குறையே அற்றவள் ஆதலின் நகைமுகம் கொண்ட தங்கையை அகல்யா தேவியென் றழைக்க லாயினரே!" சந்தப் பாடலும் அவர்கையில் சிந்தும் அருவியாகச் சிரித்துக்கொண்டு ஓடிவருகிறது: கரும்பொடு நான்பிறந்தேன் - இளங் காற்றொடு தானசைந்தேன்! அரும்பொடு தான்வளர்ந்தேன் - மலர் ஆனயின் தேன்திறந் தேன். நதிமணல் மீதிருந்தேன் - அவர் தட்டகல் மீதிருந்தார்! புதுமழை பெய்கையிலே - ஒரு புடவைக் குடைபிடித்தேன். என்பெயர் அன்னமென்றேன் - பசிக் கில்லையோ அன்னமென்றார்! பொன்மணி மண்டபத்தில் - இதழ்ப் புன்னகை அன்னமிட்டேன். காவிரி ஆழமென்றேன் - அவர் காதலே ஆழமென்றார்! சேவலேன் கூவுதென்றேன் - விழிச் சேனையேன் தாக்குதென்றார்!