பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கலீலியோவின்


என்ன செய்வது என்று திணறிய கலீலியோ; அவர்களது அகம்பாவ ஆட்சிக்கு அடிபணிந்து மறுப்பு அவர் கூறிய உண்மையை அவரே அறிக்கை விட்டு மறுத்தார் பாவம்! ஆனால் எது தனது உள்ளத்திற்கு சரி என்று பட்டதோ அதற்கேற்ப உண்மையை மட்டும் அவரது உள்மனம் துறக்கவில்லை!

இந்த உண்மையின் சாரலிலே மென்மையான குறு குறுப்பை அனுபவித்த கலீலியோவின் நண்பர்கள் அறிவார்கள்! அத்தகைய மனம் பெற்ற ஆவரே உண்மையைப் போற்றியதற்காக நாடு கடத்தப்பட்டார்! சிறை பிடிக்கப்பட்டார்! அனாதையாக உயிர் நீத்தார் பாவம்!

தனிப்பட்ட மனிதனாக நின்று உழைத்து தனது சிந்தனை காட்டிய வழியிலே சென்று ஆராய்ந்து கண்டறிந்திந்த விஞ்ஞான உண்மைகளை, அறியாமல் முடை நாற்றப் படுகுழியிலே வீழ்ந்து தத்தளித்தோர் எதிர்த்தார்கள்! ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது! உண்மையே!

19. நியூட்டன் கண்டு பிடித்தபுவியீர்ப்புப் புரட்சி

கலீலியோவுக்கு பிறகு பிறந்த ஆங்கிலப் பெருமகன் ஐசக் நியூட்டன், கோப்பர் நீக்கசின் உலகக் கோளம் என்ற தத்துவத்தை மேலும் ஆராய்ந்தனர்.

விஞ்ஞான அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட ராயல் சொசைட்டி என்ற சங்கத்தை இரண்டாம் சார்லஸ் மன்னனின் காலத்தில் அவரின் உதவியோடு சர் ஐசக் நியூடன் துவக்கினார்!

மிகப்பெரிய கணித வித்தகரான நியூடன் அந்தச் சங்கததைக் காத்தார், வளர்த்தார்! ஏன்? அவரது விஞ்ஞான ஆய்வுக்கு இந்தச் சங்கம் போதிய பாதுகாப்பாகவும் இருந்தது எனலாம்!