இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோட்டுக்குள் சீப்பாகத்
தோன்றுகின்ற வாழைப்பூக்
காட்டும் அவளுடய
கைவிரலைப் பற்றியே
முத்தமிட்டான் கண்ணன்;
முகம்சேர்த்தான்;'கண்ணே!
பணத்தோட்டப் பைங்கிளியே !
பஞ்சைநான் உன்னை
அணைக்கப் பெறுப்பானோ
உன்னப்பன்?' என்றவளைக் கேட்க மனங்கொண்டான்; வாய்திறந்து கேட்கவில்லை.
வாட்கண் அணங்குங்தன்
வாய்திறந்து 'கண்ணாளா!
கொட்டுகின்ற என்தங்தை
பார்வைக் கொடுக்குக்குள்
பட்டால் இறப்போம்நாம்;
பாராமல் இக்கணமே
கண்டி பினாங்கிற்குக்
கண்மறைவாய்ச் சென்றுகூழ்
உண்டு பிழைத்திடுவோம்
உங்களுக்குச் சம்மதமா?'
என்றவனைக் கேட்பதற்கு
எண்ணினாள் கேட்கவில்லை.
______________________________
கண்ணீர்த்தவம் 13 ______________________________