இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாணி மென்காற்று நடந்தது சாளரத்தில்
கண்விளக்கு மூடிக்
கடைதூங்கக் கண்கூசும் மின்விளக்கெல் லாமணத்து, மின்னுகின்ற சின்னப்
படுக்கை அறைவிளக்கைப்
பாவையர்கள் ஏற்ற
அடிக்கடி நாய்குரைக்க
அவ்வூர் அடங்கியது.
மாடிமேல் கண்ணன்;
மடிமேல் அவன்கோதை
ஒடித் திரைவிலக்கி
உட்புகுந்த மென்காற்று
நாணி மெதுவாய்
நடந்தது சாளரத்தில்
12 பனித்துளிகள்