இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
தமிழர் திருமலர் முல்லை - அது தமிழர் வாழ்வியல் எல்லை; கமழ்ம ணம்காதல் கெல்லும் - அது
கற்பிற் கிலக்கணம் சொல்லும்.
- 494 தாமரைப் பூவின்றேல் புலவர் - முகந்
தானதன் உவமைக் கலைவர் * ஆம்’ எனும் நீர்மலர் ஆம்பல் ஏழைக் கணிகலன், நல்லுண" வென்பர்
495 காந்தள் இதழ்களைத் தடவி - தன்
காதலி எண்ணாதான் முடவன்;
ஏந்திய பொன்னிறக் கோங்கம் - மார்பில்
ஏந்தாத" குமரியோ தீங்காம்.
496 வேழப் பூவிற்று நிற்பாள் - அவள்
விலைமாது தன்னுடல் விற்பாள்க; கோலப் பாதிரி விற்பாள் - காதல்
கொண்டாட வாங்குவோள் நிற்பாள்".
497
- ஆம் - தூயநீர்
276