புலத்தி
298
புலோமசை
புலத்தி = வண்ணாத்தி
புலத்தோர் = ஞானிகள்
புலமையோர் = கவிஞர்
புலப்பகை = ஐம்புலன்களை அடக்கல்
புல்பம் = பிதற்று
புலமகன் = புலமையுள்ளவன்
புலமகள் = சரஸ்வதி
புலமங்கை = நிலமகள்
புலமை = கல்வி, மெய்ஞ்ஞானம்
புலம் = அறிவு, இடம், ஐம்புலன், திக்கு, வயல், விடயம், நாடு, நூல், துப்பு
புலம்பல் = இரங்கல், ஒலித்தல்
புலம்பன் = ஆம்மா, கடல் நிலத் தலைவன்
புலம்பல் = தனிமை, ஒலி, அச்சம், நடுக்கம், குற்றம், வெறுப்பு, கடற்கரை, பிரிவு, வருத்தம்
புலம்பெயர்மாக்கள் = அயல் நாட்டினர், கடல் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்பவர்
புலரி = சூரியன், விடியல்
புலர்தல் = முற்றல், தெளிதல், உலர்தல்
புலவர் = அறிஞர், கம்மாளர், கவிவாணர், தேவர்
புலவல் = வெறுப்பு
புலவன் = ஆன்மா, அறிஞன், தேவன், தேவேந்திரன், புதன் முருகன்
புலவி = ஊடலின் முதிர்வு, வெறுப்பு
புலவு = இரத்தம், ஊன், புலால் நாற்றம்
புலன் = காட்சி, அறிவு, விடயம், வயல்
புலன்வென்றோர் = முனிவர்
புலகம் = சோற்றுப் பருக்கை
புலால் = ஊன், மீன், தீ நாற்றம்
புலானீர் = இரத்தம்
புலி = ஒரு மிருகம், ஒரு சாந்து, வேங்கை மரம்
புலிங்கம் = ஊர்க்குருவி, தீப்பொறி
புலித்தன் = மிலேச்சன்
புலிமுகப்பு = அரண்மனை வாயில்
புலியடிக்குலை = வாழைக்குலை
புலியூர் = சிதம்பரம்
புலுதம் = அளபெடை
புலை = இழிவு, புலால்
புலோமசித்து = இந்திரன்
புலோமசை = இந்திராணி