இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தண்ணீர்
நீரே நீரே தண்ணீரே
நெருப்பில் காய்ந்தால் வென்னீரே!
கலந்தால் பாலில் பாலாவாய்
கனிந்தால் பழத்தில் சாறாவாய்!
மலரில் புகுந்தே தேனாவாய்!
வாழ்வில் என்றும் துணையாவாய் !
சிப்பியில் விழுந்தால் முத்தாவாய்
சேற்றில் பயிரில் சத்தாவாய்
அப்புறம மேகம் போலாவாய்
ஆடி அலைந்தே மழையாவாய்!
நீரால் தாகம் போக்கிடுவோம்
நிதமும் சாதம் ஆக்கிடுவோம்!
யாரால் வந்தது தண்ணீரே?
இறைவன் சிந்திய பன்னீரே!
21
,