உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

இருக்கிறா. அவளாவது, தனியாகவாவது வாழ்க்கை பூராகவாவது, வாழ்ந்து விடுகிறதாவது! அவள்தான் பிதற்றுகிறாள் என்றாலும், நமக்கெல்லாம் மூளை இல்லாமலா போச்சு! ஹஹ்ஹஹ!’ என்று கனைத்தார் ஒருவர்.

4

பத்மா கிழவியல்ல. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் குமரிதான். பல பள்ளி மாணவிகளைப் போல, கூனல் முதுகுடையவளுமல்ல. குனிந்து நிலம் நோக்கி நடக்கும் குட்டைப் பெண்ணுமல்ல. அருமையான ஜாதிக் குதிரை மாதிரி, காம்பீர்ய நடை நடந்து, கண்ணாடி வளைக் கலகலப்பையும், சலங்கைச் சிரிப்பையும் காற்றிலே புரள விட்டு, ஒயிலாகத் திரியும் எழிலி அவள். அவளுக்கு வயது அதிகமாகி விடவில்லை. முல்லைப் பல்லின் முறுவல் அழகுச் சிறு குழி சித்திரிக்க அமைந்த பளபளப்பான கண்ணாடிக் கன்னமும், குறுகுறு விழிகள் சுழலும் இளமுகமும் சொல்லும் அவள் வயதால், பண்பால், குணத்தால் முதிரா இளஞ் சிறுமிதான் என்று. ‘பால் வடியும் வதனம்’ என்பார்களே, அத்தகைய முகத் தோற்றம், அந்த அழகி சொன்னாள் ‘வாழ்க்கை முழுவதும் கன்னியாக வாழ்வேன்’ என்று.

இன்றைய நாகரிகத்தின் கோளாறுகளிலே இதுவுமொன்று என்று ‘அமுத்தல்’ சிரிப்பு உதித்தார்கள் அனுபவஸ்தர்கள். வயது வந்த ஆண்களும், பெண்களும் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என ஜம்பமடித்துக் கொள்வதை பெருமை என்று கருதுகிறார்கள் போலும்! போகப் போக, அவர்கள் வாழ்வு மலர்ச்சி எப்படியமையினும், ஆரம்பத்தில் மிகத் தீவிரமாகச் சொல்லி விடுகிறார்கள் என்று விளக்கம் கூறிக் கொள்வதும் உண்டு.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/19&oldid=1663319" இலிருந்து மீள்விக்கப்பட்டது