பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அறிவு ஆரம்பத்திலேயே இருந்த அந்தக் காலத்திலே விதைக்கப்பட்ட இந்த நினைவுகள் வரவர விஸ்வரூபம் எடுத்தன. அத்துடன் கற்பனை மெருகும் ஏற்றன.

மரத்தடியிலும், கண்ட கண்ட இடங்களிலும் விழுந்து கும்பிட்டு ஆடிப்பாடும் காட்டுமிராண்டித் தனம் குறிப்பிட்ட ஓர் இடத்தில் பக்திபண்ணுவது என்ற நிலைக்கு வந்தது. சிந்தனை வேரோடி கொஞ்சம் கொஞ்சமாகத் தளிர்த்து , மனிதர்கள் தங்கள் வசதிகளுக்காகவும் தேவைகளை கவனிப்பதற்காகவும் கும்பல் கும்பலாக வசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒவ்வொரு கும்பலுக்கும் ஒரு தலைவன் ஏற்பட்டது போவே, தெய்வ வழிபாட்டுக்கென்று பூசாரிகளும் தோன்றினார்கள். தாங்கள் புரிந்து கொள்ள முடியாத அமானுஷிக சக்தியிடம் மக்கள் கொண்டுள்ள பயபக்தியை தங்கள் நலனுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று இலகுவில் கண்டு கொண்டார்கள்.

மனித பலவீனத்தை முதலீடாக்கி தங்கள் சுய வியாபாரத்தப் பெருக்கத் திட்டமிட்ட புரோகிதர்களின் ஆசை வெற்திரமாகவே நிறைவேறி வந்திருக்கிறது என சரித்திரம் கூறும். வருகிறது என்பதை சமூகங் காட்டும்.

மக்கள் தனித்தனிப் பிரிவுகளாக வாழ்ந்து தலைவர்களுடன் இருக்குங்காலத்தில் பூசாரிகளும், வளர வளர பிறர் அறியாமையை வளர்த்து தங்கள் அறிவைப் பெருக்கி பெருவாழ்வு வாழ்ந்த புரோகிதர்களும் குறுநில மன்னர்களும், பெருநிலக்கிழார்களும் ராஜராஜர்களும் தோன்றத்தோன்ற குருக்கள், ராஜ குரு என்ற தோரணையில்ய ஆஷாட பூதிகளும் வாழ்ந்து எவ்வளவு தூரம் மனித சமுதாய வளர்ச்சியையே