இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
நெய்தல் நில மகளிர் அவலன் (வண்டு) ஆட்டுதலோடு, உரலில் உலக்கையிட்டு அவல் இடித்தலும், வள்ளைப் பூக்கொய்து மாலை தொடுத்தலும் செய்தனர் என்பதனைக் குறுந்தொகை, பதிற்றுப்பத்துப் பாடல்களால் அறியலாம்:
பாசவ லிடித்த கருங்கா முலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு, மணல் மேடுகளில் நின்று விளையாடினர் என்று புறநானூறு குறிப்பிடுகின்றது:
செறியறிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
சிறுமனை முற்றத்தில் சிறுமகளிர் கழங்காடுகின்றனர்;
கூரை கல்மனைக் குறுங்தொடி மகளிர்
மகளிர் அழகான அருவிகளில் குதித்துக் குடைந்து குடைந்து புனலாடுகிறார்கள்.
காமர் கடும்புனல் கலந்தெம்மோடு ஆடுவாள்