அதிபதி - 14
சதுர்த்தியிலே நாதமெனும் வர்ம பூசை
தரவேணும் தயவாக அடியேனுக்கு மதித்தபடி வரம் அருள்வாய், வாலை அம்மா
வாணவெளியேவாசி மவுனத்தாயே பதித்துனது பாதத்தில் என்தன் சென்னி
பரிதிமதி அகன்றாலும் அகலாமற்றான் துதித்தபடி நின்சரணம் எனக்குத்தந்தாய்
சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ் வே. 6 பஞ்சமியில் பெற்றெடுத்தாய் பாலன்அன்னைப்
பால்கொடுத்தாய் பதநடனஞ் செய்தாய் அம்மா கொஞ்சமொரு காரியத்திற்தவக்கம் செய்தால் குப்பைவளர்பயிர்கூரை ஏறு மோதான்் தஞ்சமென்ற நின்னடியைச்சார்ந்தேன்.அம்மா
தன்னைத்தான்் அறிந்துமுன்னைத் தொண்டு செய்து துஞ்சாமல் இருக்கவுந்தான்்துணைசெய் வாய்நீ
சோதிமனோன்மணித்தாயே சுழுனை வாழ்வே. 7
சட்டியெனுஞ் சடாசட்ரத்துட் சதாசிவத்தின்
சைதன்ய போதத்திற் தான்ாய் நின்றாய் அட்டதிக்குப் பாலகரும் பெரியோர் வானோர்
அயன்திருமால் முதலான சித்தர் யாரும் கிட்டிவந்து அருள்தந்தாய் அடியேனுக்குக்
கிடைத்ததுவும் உனதுடைய கிருபை அம்மா சட்டியுடன் ரவிமதியுந்தரித்து வந்த
சோதிமனோன் மணித்தாயே சுழுனை வாழ்வே 8