304
"சுருதி தேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின்
வரிசை நன்னினை வொடும்சதக் காவழங்கிடுமின்," [1]
என்றும் இமாம் ஹூசைன் (றலி) அவர்கள் பிறந்து ஏழாம் நாள் அவர்களின் தலைமயிரை நீக்கி அதன் நிறைக்குச் சமமாகப் பொன்னை ஸதக்காவாகக் கொடுத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்பதை, -
"தெரித ரத்தின மேழினிற் செம்புவி புரக்கு
கரசர்நாயகர் வகள்மனை யடுத்தரும் புதல்வன்
கரிய மென்சிர மயிரினைக் களைவித்தவ்வெடையி
னிரசி தஞ்சதக் காவென வெடுத்தினி தளித்தார்" [2]
என்றும் கணக்கற்ற திரவியத்தை சதக்காவாகக் கொடுக்கப்பட்டமையை,
"அலகிலா நிதியந் தனைச்சதக் காவென்
றவரவர்க் களித்தனன் பறித்து."[3]
என்றும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சதக்கா கொடுக்கப்பட்டுள்ளமையை,
"ஆலய மறந்த தீனுடை ஹபீபுக்
கன்பொடு முவப்டொடுஞ் சதக்காச்
சாலவு மருளி ... ... ... ..."[4]
என்றும் வருணிக்கப்பட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.
வேளை, நேரம் என்பதனைக் குறிக்க அறபியில் 'வக்த்'
என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. இதே கருத்துக்களில் 'ஸாஅத்' என்னும் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.