பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

செயலும் செயல் திறனும்



உடல்நிலை மாற்றமும் உடலால், உள்ளம் அறிவு நிலைகளின் மாற்றங்களும் நிகழ்தலால், அவற்றிற்கும், மாறுபாடில்லாத உணவை உண்ணுதலே தக்கது என்க)

6. உணவு மாறுபாடுகளால் உடல் துன்புறுவதுடன் உயிரும் துன்பமடைவதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். (945)

7. அளவான சரியான உணவால் உடல் ஆற்றல், பெறுவது மட்டுமன்றி, இன்பமும் அடைகிறது. அதுபோல் மறுபாடலின, அளவு குறைந்த அல்லது அளவு மிகுந்த அல்லது சரியில்லாத ஆணவால், உடல் ஆற்றலை இழப்பது மட்டுமன்றித் துன்பமும் அண்டகிறது. அதனால் நோயும் படுகிறது. (94)

8. பசித் தீயின் அளவு தெரியாமல், ஆசைத்தீயின் அளவுக்கு உண்பவனிடம் பலவகையான நோய்கள் வந்து சேரும். (947)

9. மருந்தென்பது தனியாக ஒன்று இல்லை. உணவுதான் மருந்தாகவும் மருந்துதான் உணவாகவும் பயன்படுகின்றன. உடல் பூதங்களின் சேர்க்கை பூதவியல் மூலகங்களே வேறு வேறு மணமும் சுவையும் நிறமும் கொண்டு அவரவர் மனவுணர்வுக்கும் காலம், இடம் இவற்றுக்கும் பொருந்திய வகையில் வேறு வேறு பெயர்களுடனும் உருவங்களுடனும் உணவுகள் என்று பெயர் பெறுகின்றன. இனி, உடலில், உணவு வகையில் சேரும் பல்வேறு மூலகங்கள், உடலின் பல்வேறு இயக்கங்களால் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப, ஆற்றலாக மாறிச் செலவிடப் பெறுகின்றன. அவ்வாறு செலவிட்டுத் தீர்ந்துபோன மூலகங்களை அறிந்து அவற்றையே உணவாகவும் அல்லது மருந்தாகவும் உண்ண வேண்டும். பூதவியல் மூலகங்களே இயற்கையாகக் கிடைக்கின்ற பொழுது உணவாகவும், செயற்கையாகப் பிரித்தெடுக்கப் பெறுகின்றபொழுது மருந்தாகவும் கருதப்படுகின்றன. ஆனால், மூலகங்கள் மருந்து என்னும் பெயருடன் செயற்கைப் பொருள்களாக மாற்றப் பெறுகையில், அவை சுவையும், அளவும், நிறமும் மாற்றப்பெற்று விருப்பமுடன் உண்ணுவதற்கு ஏற்பில்லாத தன்மைகளை எய்துகின்றன. எனவே, மருந்து என்ற வகையில் செயற்கை மூலகங்களை உண்ணுவதைவிட உணவு என்ற வகையில் இயற்கை மூலகங்களை மன ஏற்புடன் உண்ணுவதே தக்கது. ஆகவே மருந்து என்னும் நிலை பூதங்களால் ஆக்கப் பெற்ற உடலுக்குத் தேவையில்லை. நாம் முன்னர் அருந்திய உணவாகிய மூலகத்தில் எது குறைந்துவிட்டதோ, அதையே தேடி விரும்பி உண்ணின் அதுவே உடலுக்குப் போதுமானதாகும். 84ஆஉடலில் இரும்புச் சாரம் அற்றுப்போமாயின் இரும்புச் சாரமுள்ள புளிச்சக்கீரை, முருங்கை, கரிசலாங்காணி போன்றவற்றையும், சுண்ணச்சாரம் அற்றுப்போமாயின் எலுமிச்சை, சீமைக் கத்தரி,