18
18
கு. இராது -அது அசாத்தியம் இரண்டு மூன்று தினங் களாக, ஏதோ அப்படி ஒரு வதந்தி கேள்விப்பட்டேன் -ஆயினும், அதை நான் நம்பவேயில்லை.
மோ. குண்டுராவ், நீங்கள் கூட நம்பாத வதந்திகள் இந்த உலகத்தில் ஏதாவது இருக்கிறதோ ? ஆம்-இருக்கின்றன.- வதந்திகளிலும் வதந்திகள் இல்லையா ? இந்த வதந்திகளெல்லாம் இல்லாவிட்டால் இவ்வுலகம் எப்படி உயிர் வாழ்வது ?
கு. ஆம், நீங்கள் சொல்வது சரிதான் !-இந்த உலக வாழ்க்கைக்கு வதந்தி சட்னியைப் போலவாம்; அது இல்லாவிடில் சமூக வாழ்க்கையே சாரமற்றதாம்.
மோ. ஆமாம் மிகவும் உண்மைதான், எனக்கு சட்னி என்றால் மிகவும் பிரியம். .
தா. (மிஸ் மோஹரிடம்) சரி-நீ போவதன்முன் நா ன் உன்னை மறுபடியும் பார்க்கக்கூடுமா ?
கு. அது கூடவே கூடாது -என்ன அப்பா தாமு, இந்த அம்மாளே திருச்சூழியைவிட்டு அவ்வளவு சுலபமா கப்போக விடுகிறாயே? திருச்சூழியில் இந்த அம்மாள் தான், இந்திய சமூகத்திற்கும், ஆங்கில சமூகத்திற்கும் உயிர்நிலை போன்றவர்கள் ; ஸ்திரீகளில் இவர்களிலும் மிஞ்சிய கற்றறிந்தவர்கள் இல்லையே.
மோ. இந்த உபன்யாசத்தின் முடிவில் நான் விடைபெற் றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி.
கு. அது ஒருகாலும் கூடாது-நான் நாளைக்கே இதை ஆட்சேபிப்பதற்காக, மைதானத்தில் ஒரு பெருங்கூட்டம் கூட்டி
மோ.அது மிகவும் சிறப்பான ஓர் யோசனை -இதற்குள் ளாக நான் போய் விடுகிறேன்.
தா. நீ கடைசியாகத் தீர்மானிப்பதன் முன், இன்னொரு முறை யோசித்துப் பார்த்தால் நலமெனத் தோன்று கிறதெனக்கு.
கு.உங்களுக்கிடையில் நான் வருவது நியாய மல்லவினி. நான் போய் வருகிறேன்.