திருஞானசம்பந்தர்
திருநெல்வாயில்
திருச்சிற்றம்பலம்
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்திச் Endhai eesan emperumaan arruamar kadavull endru ēththich சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றுல் sindhai seybavarkku allaal sendru kaikūduvadhu andraal கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நீவா மல்கு கரைமேல் kandha maamalar undhik kadumpunal neevaa malgu karaimē அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே Andhann sōlai nelvaayil araththurrai adigall tham arullẽ "என் தந்தையே! ஈசனே! எமது பெருமானே! எருது வாகனத்தில் அமர்ந்த கடவுளே!" என்று மனத்தில் நினைப்பவர்க்குத் (திருவருள்) கிடைக்கும். மற்றவர்களுக்குக் கிடைக்காது. வாசனை உடைய மலர்களைத் தள்ளிக்கொண்டு பெருவெள்ளம் பொருந்தியது நிவா என்ற ஆறு; அதன் கரைமேல் குளிர்ந்த சோலைகள் சூழ இருப்பது நெல்வாயில்; அங்கு இருக்கும் கோயில் அரத்துறை; அக் கோயிலில் உள்ள இறைவனின் திருவருள்.
எந்தை- என் தந்தை-my Heavenly Father
ஈசன்—Supreme Being; Lord
எம்பெருமான்—my Lord ஏறு --Bull
அமர்-இருத்தல்-to sit கடவுள்—God
என்று-so ஏத்தி-worship
சிந்தைசெய்பவர்-மனத்தில் நினைப்பவர்-those who entertain in the mind
அல்லால்—but for (them)
கைகூடுவது-கிடைப்பது; to attain
அன்று-not (possible)
கந்தம்—fragrance மலர்—flower
உந்து-தள்ளு; to push
கடும்புனல்- heavy floods