77
1. l-
(இ ள்) செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடை ா ப யெ செல்வம்; பொருட்செல்வமாவது கீழாயினார் கண்ணும்
வாதலான் (எ-று).
இஃது, அருளின் நிலைமை கூறிற்று. 2
243. அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள் சேர்ந்த
வின்னா வுலகம் புகல்.
(இ-ள்) அருளைப் பொருந்தின நெஞ்சினையுடையவர்க்கு இருளைப் பொருந்தின நரக லோகம் புகுதலில்லை, (எ-று).
இது, நாகம் புகாரென்றது.
244. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ய
தன்னுயி ரஞ்சும் வினை.
(இ-ள்) நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வாற்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருதலில்லையென்று சொல்லுவர், (எ-று). இது, தீமை வாராதென்றது. 4.
245. அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.
(இ-ள்) அருளுடையார்க்கு அல்லலில்லை; அதற்குச் சான்று காற்றியங்கப்பட்ட வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம், (எ-று).
அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படு மென்றது. என்னை அல்லல் வருவது சிலராலன்றே; யாவர்மாட்டும் அருள் செய்தலால் யாவரும் அல்லல் செய்வார் இன்றா மாதலான். 5
246. அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு