169
18. கொடுங்கோன்மை
(இ-ள்) பசுக்கள் பால் குறையும், அந்தணர் வேதம் ஒதார்; அரசன் காவானாயின், (எ.று).
இது, காவாமையால் வருங் குற்றங் கூறிற்று. 4.
555. முறைகோடி மன்னவன் செய்யி னுறை கோடி
யொல்லாது வானம் பெயல்.
(இ-ள்) முறைமைகோட மன்னவன் செய்வனாயின் , மழை துளிவிடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும், (எ-று).
இது முறைமை கோடினால் வரும் குற்றம் கூறிற்று. 5
556. கூழுங் குடிய மொருங்கிழக்குங் கோல்கோ டி ச்
சூழாது செய்யு மர சு.
(இ-ள்) பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப் பன், முறை கோடி ஆராயாமல் செய்யும் அரசன் , (எ-று).
இஃது ஆராயாது செய்வதனால் வருங் குற்றங் கூறிற்று 6
557. கொலை மேற்கொண்டாரிற்கொடி தேயலை மேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.
(இ-ள்) கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடி யன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன், (எ-று). 7
558. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு
(இ-ள்) * உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால்
வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது, அத்தன்மைத்து; அரசன் அருளிலனாதல் அவன் கீழ்வாழும் மக்கட்கு, (எ-று).
இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று 8
இது மணக்குடவருரை