இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மக்களும் வாழ்க்கை முறையும்
461
- "ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
- வெள்ளிக்கு வெள்ளி
- விடியத் தலைமுழுகி
- அள்ளி மிளகுதின்று
- அனந்த விரத மிருந்து
- கேதாரி நோன்பாலே
- கிடைச்ச திரவியமே
- ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
- ஆறுஇரண்டு காவேரி
- அதன் நடுவே சீரங்கம்
- சாமி கிருபையாலே
- தந்திட்ட திரவியமே
- ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
- நித்திரைபோ நித்திரைபோ
- நேரமாச்சு நித்திரைபோ
- சிற்றிலைபூந் தொட்டிலிலே
- சிகாமணியே நித்திரைபோ
- ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
- "கண்ணே உறங்குறங்கு
- கண்மணியே நீஉறங்கு
- கண்ணான கண்ணுக்குக்
- கண்ணாறு வந்ததென்ன
- சுண்ணாம்பு மஞ்சளுமாய்ச்
- சுற்றி எறிந்திடுவோம்
- வெற்றிலையும் பாக்கும்
- வீசி எறிந்திடுவோம்
- ஆனையைக் கண்டுநீ
- அலறி அழவேண்டாம்
- அதட்டியே ஓட்டிவிட்டோம்
- அஞ்சுகமே கண்வளராய்
- பூனையைக் கண்டுநீ
- புலம்பி அழவேண்டாம்
- ஈனமற ஒட்டிவிட்டோம்
- இளவரசி கண்வளராய்
- "கண்ணே உறங்குறங்கு