இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுந்திரு தோழா! அடானா ரூபகம்.
எடுப்பு
எழுந்து விறைத்து நில்தோழா-பசும் இருப்புச் சிலை போல மார்பைப் புடைத்து
மேல் எடுப்பு
அழிந்ததோ பண்டையர் வீரம்-உன்றன் அதரத்தி லூறிய தாய்முலைச் சாரம்.
அமைதி
மூடப் பழக்கத்தைத் தள்ளு-உன் மூதையர் வாழ்வினில் இவையுண்டோ விள்ளு! நாடு நமது பாட்டன் சொத்தாம்-அதை நாம் தனித்தாளுவோம் விலையிலா முத்தாம்! என்றும் தனித்தர சாண்டார்-முன்னோர் இலங்கை கடாரம் வடநாடு வென்றார் இன்றுநாம் எந்நிலை யானோம்-சிங்க ஏறே புறப்படு நாம் மீட்போம் நாட்டை.
45