பக்கம்:தொடுவானம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 எழுந்திரு தோழா! அடானா ரூபகம்.

          எடுப்பு  

எழுந்து விறைத்து நில்தோழா-பசும் இருப்புச் சிலை போல மார்பைப் புடைத்து

      மேல் எடுப்பு

அழிந்ததோ பண்டையர் வீரம்-உன்றன் அதரத்தி லூறிய தாய்முலைச் சாரம்.

         அமைதி

மூடப் பழக்கத்தைத் தள்ளு-உன் மூதையர் வாழ்வினில் இவையுண்டோ விள்ளு! நாடு நமது பாட்டன் சொத்தாம்-அதை நாம் தனித்தாளுவோம் விலையிலா முத்தாம்! என்றும் தனித்தர சாண்டார்-முன்னோர் இலங்கை கடாரம் வடநாடு வென்றார் இன்றுநாம் எந்நிலை யானோம்-சிங்க ஏறே புறப்படு நாம் மீட்போம் நாட்டை.

          45
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/47&oldid=1322931" இலிருந்து மீள்விக்கப்பட்டது