பக்கம்:தம்ம பதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானை ☐ 77

327. அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக் கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்கமுடையவனாயும் ஒரு தோழன் கிடைக்கவில்லையானால், தன்னை வென்ற பகையரசனிடம் நாட்டைவிட்டு வெளியேறும் மன்னனைப் போலவும்,யானைகளின் வனத்திலே யானை (சுயேச்சையாய்த்) திரிவது போலவும், நீ தனியாகவே வாழ்வாயாக. (10)

328. மூடனுடைய நட்பைப் பார்க்கிலும் ஒருவன் தனியே வசிப்பது நலம். ஆசைசகளைக் குறைத்துக் கொண்டு, யானைகளின் காட்டில் யானை (சுயேச்சையாகத்) திரிவது போல், அவன் தனியே செல்வானாக; பாவகருமம் எதையும் செய்யாதிருப்பானாக. (11)

329. அவசியம் ஏற்படும்போது நண்பர்கள் வாய்ப்பது இனிமையாம்; ஒருதலையாக இல்லாத திருப்தி இனிமையாம்; மரண காலத்தில் (முன் செய்த) புண்ணியம் இனிமையாம்; எல்லாத் துக்கங்களையும் விட்டொழித்தல் இனிமையாம். (12)

330. இந்த உலகில் தாயை பேற்றுதல் இனிது; தந்தையைப் போற்றுதல் இனிது; துறவியைப் போற்றுதல் இனிது; இனிதே மெய்ஞ்ஞானியைப் போற்றுதல். (13)

331. வயோதிகம்வரை நல்லொழுக்கம் நிலைத்திருத்தல் இனிது; (அறத்தில்) உறுதியான நம்பிக்கை இனிது; ஞானத்தை அடைதல் இனிது; இனிதே பாவங்களை விலக்கல். (14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/79&oldid=1359832" இலிருந்து மீள்விக்கப்பட்டது