பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. மெளனம் உடைந்துபோன மணி ஒசையற்றிருப்பதுபோல், உன்னை நீ அடக்கிக்கொண்டு அமைதியாயிருந்தால், நீ நிருவானத்தை அடைந்தவனாவாய். ஏனெனில், நீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையிலிருக்கிறாய். '

பிக்குகளே! நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது, புண்ணியமான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள், அப்படியில்லையானால், மேலான (ஆரிய) மெளனத்தைக் கைக்கொள்ளவும்; இந்த இரண்டில் ஒன்றையே நீங்கள் மேற்கொள்ள வேண்டும். " ஆரிய மெளனம் அமைதியான உள்ளத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் சிந்தனை தவறாமல் இருக்கும் நிலை. 40 | புத்தரின் போதனைகள்